ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது பெற்ற இந்திய பொறியாளர்

சிறந்த தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கர் விருதை இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர் பெற்றுள்ளார்.

News image
Updated On :16 பிப்ரவரி 2018, 10:27 am

இந்தியாவைச் சேர்ந்த பொறியாளருக்கு சிறந்த தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். "சயின்டிஃபிக் அன்ட் டெக்னிகல் ஆஸ்கர் விருது 2018" அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் பெவர்லி ஹில்ஸில் வழங்கப்பட்டது.

அப்போது "ஷாட்ஓவர் கே1 கேமரா சிஸ்டம்" என்ற தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் செயலாக்கம் உள்ளிட்டவகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக புணேவைச் சேர்ந்த விகாஸ் சதாயீ என்பவருக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வான்வெளியில் இருந்து துல்லியமாக புகைப்படம் எடுக்க முடியும். ஹெலிகாப்டரில் பொருத்தப்படும் கேமரா மற்றும் லென்ஸ் ஆகியவற்றுக்கு இடையில் இதனை இணைப்பதன் மூலம் அதிர்வலைகளை கட்டுப்படுத்தி துல்லியமாக படம் எடுக்க உதவுகிறது.

இந்த வகை தொழில்நுட்பத்தை சதாயீ, ஜான் கோயல், பிராட் ஹர்ண்டல், ஷேன் பக்ஹம் ஆகிய 4 பேர் கொண்ட குழு வடிவமைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.