2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்: டொனால்டு ட்ரம்ப் தகவல் 

எதிர்வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்: டொனால்டு ட்ரம்ப் தகவல் 
Published on
Updated on
1 min read

நியூயார்க்: எதிர்வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மெயில் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டிடில் தெரிவித்துள்ளதாவது:

எதிர்வரும் 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் உள்ளேன்.  அனைவரும் நான் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர் என்பதுபோல்தான் தெரிகிறது.

ஜனநாயக கட்சியில் என்னைத் தோற்கடிக்க யாரும் இல்லை. அப்படி யாரையும் நான் பார்க்கவில்லை.  அவர்கள் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள்தான்.

'பிரெக்சிட்' பற்றி இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் ஆலோசனை மேற்கொண்டேன். அது ஒரு சிக்கலான விசயம் என அவர் தெரிவித்தார். அது தொடர்பாக அவர் கூறியதுதான் சரி

இவ்வாறு அவர் தெரிவித்துளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com