டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அஜர்பைஜான் போதை மறுவாழ்வு மையத்தில் பயங்கர தீ விபத்து: 30 பேர் பலி! 

அஜர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகுவில் போதை மறுவாழ்வு மையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் உயிரிழந்தாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :2 மார்ச் 2018, 11:16 am

DIN

பாகு: அஜர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகுவில் போதை மறுவாழ்வு மையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் உயிரிழந்தாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அஜர்பைஜான் சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐரோப்பிய ஆசிய கண்டங்களின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் நாடு அஜர்பைஜான். இதன் தலைநகர் பாகு. இங்கு போதை அடிமைகள் மறுவாழ்வு மையம் ஒன்று அமைந்திருக்கிறது. இங்கு பல்வேறு வகையான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு போதை மீட்பு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மறுவாழ்வு மையத்தில் வெள்ளியன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.