சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் உட்பட 4 பேர் பலி

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவரும், மருத்துவமனை ஊழியர்கள் 2 பேரும் உயிரிழந்தனர்.
சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் உட்பட 4 பேர் பலி
Updated on
1 min read


சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவரும், மருத்துவமனை ஊழியர்கள் 2 பேரும் உயிரிழந்தனர்.

மெர்ஸி மருத்துவமனைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் மருந்தாளுனர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவரும் உயிரிழந்தார். 

சம்பவ இடத்தை சுற்றி வளைத்த காவல்துறையினர், குற்றவாளியை சுட்டுக் கொன்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் குற்றவாளிக்கும், மற்றொரு பெண்ணுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com