மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது உறுதி

இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது உறுதியாகியுள்ளது. 

News image
Updated On :29 நவம்பர் 2018, 1:57 pm

DIN

நியூயார்க்: இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது உறுதியாகியுள்ளது. 

ஆர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில், வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு வரும் ரஷிய அதிபர் புதினை டிரம்ப் சந்தித்துப் பேசுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, உக்ரைன்-ரஷியா இடையே மீண்டும் போர்ப் பதற்றம் உருவாகியுள்ளதால், புதின் உடனான சந்திப்பை ரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளதாக, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியுள்ளார்.

முந்தைய சோவியத் ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இருந்த நாடுகளான உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் அரசுக்கும், ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கும் உள்நாட்டுப் போர் தொடங்கிய பிறகு, அந்த நாட்டின் அங்கமாக இருந்த கிரீமியா தீபகற்பத்தை ரஷியா கடந்த 2014-ஆம் ஆண்டில் பலவந்தமாக இணைத்துக் கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்தச் சூழலில் கிரீமியா கடற்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்த உக்ரைன் கடற்படைக்குச் சொந்தமான 3 போர்க் கப்பல்களை ரஷிய கடலோரக் காவல் படை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதுடன், அந்தக் கப்பல்களை சிறைப்பிடித்தது. மேலும், அந்தக் கப்பலில் வந்த 24 மாலுமிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ரஷியாவின் இந்தச் செயல், உக்ரைனுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள மாலுமிகளை விடுவிக்க வேண்டும் என்று ரஷியாவை உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. மேலும், ரஷியா மீது மேலும் சில தடைகளை விதிக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தபோது இந்த வாரம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது உறுதியானது என கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மாளிகையின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி 20 மாநாட்டின்போது புதினை டிரம்ப் சந்திக்கிறார். இந்த சந்திப்பை வெள்ளை மாளிகையும் உறுதி செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.