பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சீனாவில் பண்டைய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் 

சீனாவில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பண்டைய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய பாடத்திட்டத்திம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  

Published On :

பெய்ஜிங்: சீனாவில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பண்டைய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய பாடத்திட்டத்திம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  
 
சீன கலாசாரத்தை  ஊக்குவிக்க அந்நாட்டு கல்வி அமைச்சகம் மற்றும் மாநில மொழி ஆணைக்குழு  இணைந்து ஒரு திட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் சீன பாரம்பரிய கலாச்சாரத்தை ஊக்குவிக்க எழுத்து மற்றும் பேச்சு தொடர்பான கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 

இதற்காக ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  பாரம்பரிய சீன கலாச்சாரத்திற்கு என தனியே பாடப்புத்தகங்கள் உருவாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பண்டைய சீ்னர்கள் வாழ்வில் சீனக் கலாச்சாரம் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. 2017 ம் ஆண்டு சீனாவின் மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சிறந்த பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் வழிகாட்டல்களின் படி சீனப் பள்ளிகளில் பண்டைய   கலாச்சாரம் ஒரு முக்கிய  கற்றல் பணியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.