சர்வதேச போலீஸான 'இன்டர்போல்' அமைப்பின் தலைவரைக் காணவில்லை: மனைவியின் புகாரால் பரபரப்பு 

சர்வதேச போலீஸ் என்று அழைக்கப்படும் 'இன்டர்போல்' அமைப்பின் தலைவரான மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி புகார் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
சர்வதேச போலீஸான 'இன்டர்போல்' அமைப்பின் தலைவரைக் காணவில்லை: மனைவியின் புகாரால் பரபரப்பு 
Published on
Updated on
1 min read

பாரிஸ்: சர்வதேச போலீஸ் என்று அழைக்கப்படும் 'இன்டர்போல்' அமைப்பின் தலைவரான மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி புகார் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சீனாவைச் சேர்ந்தவர் மெய்ங் ஹாங்வாய். சீனாவின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சராக பணியாற்றி வருகிறார். அத்துடன் சர்வதேச காவல்துறையின் தலைமை ஒருங்கிணைப்பு அமைப்பான 'இன்டர்போல்' அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். 

இன்டர்போல் அமைப்பின் தலைமையகமானது பிரான்ஸின் லியான் நகரில் அமைந்துள்ளது. அங்குதான் ஹாங்வாய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில்  மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி புகார் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அவரை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்துகாணவில்லை என்று மனைவி தற்போது புகார் கூறிய இருக்கிறார். 

முன்னதாக 'இன்டர்போல்' அமைப்பில் பணியாற்றிய பொழுதும் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் காணாமல் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com