நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆள் மாறும் 'அலிபாபா' நிர்வாகம்: அடுத்தது என்ன? எதிர்பார்ப்பில் சீனா 

சீனாவின் மிகப்பெரிய இ.காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதன் நிறுவனரான ஜாக் மா அறிவித்துள்ளார்.

News image
Updated On :10 செப்டம்பர் 2018, 4:21 pm IST

பீஜிங்: சீனாவின் மிகப்பெரிய இ.காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதன் நிறுவனரான ஜாக் மா அறிவித்துள்ளார்.

அலிபாபா என்பது சீனாவின் மிகப்பெரிய இ.காமர்ஸ் நிறுவனமாகும். இதனை நிறுவியவர் ஜாக் மா (54). சீனா மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இவர் தனது வியாபார முதலீடுகளைச் செய்துள்ளார். அத்துடன் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் அலிபாபாவின் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதன் நிறுவனரான ஜாக் மா திங்களன்று  அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு ஹாங்காங்கில் இருந்து வெளிவரும் ஜாக் மாவுக்குச் சொந்தமான 'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்" என்னும் நாழிதழில் திங்களன்று வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

அலிபாபாவின் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து ஜாக் மா அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளார். அவருக்கு அடுத்தாக அந்த பதவிக்கு, நிறுவனத்தின் தற்போதையய தலைமைச் செயல் அதிகாரியான டேனியல் ஷாங் (46) தேர்நதெடுக்கப்பட்டுள்ளார்.   

டேனியல் ஷாங்  அலிபாபா நிறுவனத்தின் செயல் தலைவராக 10.09.2019 அன்று நியமிக்கப்படுவார். அதேசமயம் ஜாக் மா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருராகவும், அலிபாபா நிறுவனத்தின் நிரந்தர பங்குதாரராகவும் நீடிப்பார்.

இந்த செயல்பாடானது சுமுகமாக நடக்கும் பொருட்டு 2020-ஆம் ஆண்டு நிறுவன பங்குதாரர்கள் கூட்டம் நடைபெறும்வரை இந்த பொறுப்பில் ஜாக் மாவே தொடர்ந்து நீடிப்பார்.

இதுதொடர்பாக குழும ஊழியர்களுக்கு மா கடிதமொன்றையும் எழுதியுள்ளார். ஏற்கனவே அவரது ஓய்வு தொடர்பாக குழப்பமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில்,  அனைவருக்கும் தெளிவை உண்டாக்கும் பொருட்டு ஜாக் மாவின் பிறந்த தினமான திங்களன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.