அமெரிக்க அகதிகள் மறுவாழ்வு திட்டம் ஊழல் நிறைந்தது: அதிபர் டிரம்ப் சாடல்
அமெரிக்காவின் அகதிகள் மறுவாழ்வு திட்டம் ஊழல் நிறைந்தது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாகச் சாடினார்.


அமெரிக்காவின் அகதிகள் மறுவாழ்வு திட்டம் ஊழல் நிறைந்தது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாகச் சாடினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு திட்டம் ஊழல் நிறைந்தது. ஏனென்றால் அவர்கள் எதை தெரிவித்தால் அமெரிக்காவில் மறுவாழ்வு கிடைக்கும் என்பதை நன்கு அறிந்துள்ளனர்.
அதற்கு காரணம் அமெரிக்க வழக்கறிஞர்கள் தான். அவர்கள்தான் அகதிகளுக்கு எதை வலியுறுத்த வேண்டும் என்று முன்பே தெரிவித்துவிடுவார்கள்.
ஆனால், மறுவாழ்வு திட்டத்தில் குடியேறுபவர்களை பார்த்தால், மல்யுத்த வீரர்களை போன்று இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த கருத்து எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்புச்சுவர் ஏற்படுத்தி மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...