தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

இலங்கை தலைநகர் கொழும்புவில் கைப்பற்றப்பட்ட குண்டு வெடித்து விபத்து 

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை கந்தானை பகுதியில் கைப்பற்றப்பட்ட குண்டு திங்கள் மாலை வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது

News image
Updated On :22 ஏப்ரல் 2019, 4:48 pm IST

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை கந்தானை பகுதியில் கைப்பற்றப்பட்ட குண்டு திங்கள் மாலை வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகையினை ஒட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு கூடியிருந்தனர்.

இந்நிலையில்  ஞாயிறு காலை 8.45 மணியளவில் அங்குள்ள கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள தேவாலயம், ஷாங்ரிலா, சினமான் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி நட்சத்திர விடுதிகளிலும்  அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.

அதையடுத்து சிறிது நேரத்தில் தெஹிவல என்னும் இடத்தில உள்ள தங்கும் விடுதி ஒன்றிலும், அதையடுத்து குடியிருப்பு பகுதியிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. 

இந்த குண்டுவெடிப்புகளில் சுமார் 295 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளார்கள். அத்துடன் அங்கு வெடிக்காத சில குண்டுகளும் சில இடங்களில் கைப்பற்றப்பட்டுள்ளன

அதே சமயம் திங்கள் காலை இலங்கை சர்வதேச விமானநிலையம் அருகில் ஒரு குண்டும், கொழும்பு பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்திலிருந்து 87 டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக அங்கு தொடந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை கந்தானை பகுதியில் கைப்பற்றப்பட்ட குண்டு திங்கள் மாலை வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட குண்டுகளை செயலிழக்க வைக்கும் முயற்சியில் இலங்கை போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை கந்தானை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் இருந்த குண்டு எதிர்பாராதவிதமாக வெடித்தது.

இதன்காரணமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. தொடந்து அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.