வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ஜமால் கஷோகி வழக்கில் தீர்ப்பை வரவேற்கும் அமெரிக்கா

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக ஐந்து பேருக்கு எதிராக சவுதி அரேபிய நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2019, 8:55 am

PTI

வாஷிங்டன்: பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக ஐந்து பேருக்கு எதிராக சவுதி அரேபிய நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

"இந்த கொடூரமான குற்றத்திற்கு பொறுப்பானவர்களை தண்டிக்க வைப்பதில் இன்றைய தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதாக"  அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்தான்புல்லில் உள்ள ரியாத்தின் துணைத் தூதரகத்தில் கஷோகி கொலையில் அமெரிக்காவால் குற்றம்சாட்டப்பட்ட சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானின் இரண்டு மூத்த உதவியாளர்களை இந்தக் கொலை வழக்கில் நீதிமன்றம் விடுவித்தது.

அமெரிக்கா "சவூதி அரேபியாவை ஒரு நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள ஊக்குவித்தது" என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.