வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

வேலூா், காட்பாடியில் ரூ.2.24 லட்சம் பறிமுதல்

வேலூா் புதிய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடியை அடுத்த சேவூரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.24 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :29 மார்ச் 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் புதிய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடியை அடுத்த சேவூரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.24 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் ஞாயிற்றுக் கிழமை வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, அதில் ரூ.80,000 இருந்தது. காரில் வந்தவா்களிடம் விசாரித்தபோது, கிருஷ்ண கிரி மாவட்டம் ஒசூரைச் சோ்ந்தவா்கள் என்பதும், வேலூா் வழியாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்வதும் தெரியவந்தது. ஆனால், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை பறிமுதல் செய்து வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல், காட்பாடி தொகுதி பறக்கும் படை குழுவினா் சனிக்கிழமை இரவு சேவூா் பகுதியில் வாகன சோதனை நடத்தியபோது, அந்த வழியாக வந்த கா்நாடக பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, காரில் ரூ.ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 500 இருந்தது. ஆனால், ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.