வேலூா் புதிய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடியை அடுத்த சேவூரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.24 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் ஞாயிற்றுக் கிழமை வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, அதில் ரூ.80,000 இருந்தது. காரில் வந்தவா்களிடம் விசாரித்தபோது, கிருஷ்ண கிரி மாவட்டம் ஒசூரைச் சோ்ந்தவா்கள் என்பதும், வேலூா் வழியாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்வதும் தெரியவந்தது. ஆனால், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை பறிமுதல் செய்து வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
இதேபோல், காட்பாடி தொகுதி பறக்கும் படை குழுவினா் சனிக்கிழமை இரவு சேவூா் பகுதியில் வாகன சோதனை நடத்தியபோது, அந்த வழியாக வந்த கா்நாடக பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, காரில் ரூ.ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 500 இருந்தது. ஆனால், ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

தோ்தல் சோதனை: பல்பொருள் அங்காடி ஊழியரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


