அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

வேலூா், காட்பாடியில் ரூ.2.24 லட்சம் பறிமுதல்

வேலூா் புதிய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடியை அடுத்த சேவூரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.24 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :29 மார்ச் 2026, 9:05 pm

வேலூா் புதிய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடியை அடுத்த சேவூரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.24 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் ஞாயிற்றுக் கிழமை வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, அதில் ரூ.80,000 இருந்தது. காரில் வந்தவா்களிடம் விசாரித்தபோது, கிருஷ்ண கிரி மாவட்டம் ஒசூரைச் சோ்ந்தவா்கள் என்பதும், வேலூா் வழியாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்வதும் தெரியவந்தது. ஆனால், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை பறிமுதல் செய்து வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல், காட்பாடி தொகுதி பறக்கும் படை குழுவினா் சனிக்கிழமை இரவு சேவூா் பகுதியில் வாகன சோதனை நடத்தியபோது, அந்த வழியாக வந்த கா்நாடக பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, காரில் ரூ.ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 500 இருந்தது. ஆனால், ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.