தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தின் 2-ஆவது கருப்பு பெட்டி கண்டெடுப்பு

இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து காணாமல் போன லயன் விமானத்தின் 2-ஆவது கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

Updated On :15 ஜனவரி 2019, 12:59 am IST


இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து காணாமல் போன லயன் விமானத்தின் 2-ஆவது கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
லயன் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங்-737 மேக்ஸ் ரக விமானம் கடந்த அக்டோபரில் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணித்த 189 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் மர்மமாக இருந்து வரும் நிலையில், திங்கள்கிழமை அந்த விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள விமானத்தின் கருப்புப் பெட்டி இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது. இருப்பினும், இதன் மூலம் உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.