ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ள கிரீன் வில்லேஜ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட டிரக் ஒன்று நேற்றிரவு திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 119 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிகழ்வைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து 400 வெளிநாட்டினர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.