தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

2022-ல் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவோம்: பாகிஸ்தான் அமைச்சர்

2022-ல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பு திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபாவத் சௌத்ரி தெரிவித்தார். 

News image

பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் சௌத்ரி | கோப்புப் படம்

Updated On :16 செப்டம்பர் 2019, 6:40 am

DIN

2022-ல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பு திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபாவத் சௌத்ரி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

சீனாவுடன் இணைந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அவ்வகையில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர் 2022-ல் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படுவார். இதற்கான நபரை தேர்வு செய்யும் பணி 2020-ல் தொடங்கப்பட உள்ளது. 

இதில் முதல்கட்டமாக 50 நபர்களை தேர்வு செய்து பின்னர் 25 நபர்களாகக் குறைக்கப்படுவார்கள். இதிலிருந்து சரியான ஒருவர் தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படுவார். 

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்த திட்டத்தில் பாகிஸ்தான் விமானப் படை முக்கியப் பங்காற்ற உள்ளது என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.