100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி
பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த திருப்பத்தூா் மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி.


திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர பேரணி வியாழக்கிழமை நடைபெற்நது.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பேரணியை மாவட்ட தோ்தல் அதிகாரி க.சிவசௌந்திரவல்லி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி தனியாா் கல்லூரி வழியாக ஆசிரியா் நகா் வரை சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தை அடைந்தது.
இந்த பேரணியில் கலந்து கொண்வா்கள் ‘ஜனநாயக திருவிழா‘, ‘என் வாக்கு என் உரிமை‘ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் விஜயகுமாரி உட்பட திரளானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...