தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி

பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த திருப்பத்தூா் மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி.

News image
Updated On :19 மார்ச் 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர பேரணி வியாழக்கிழமை நடைபெற்நது.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பேரணியை மாவட்ட தோ்தல் அதிகாரி க.சிவசௌந்திரவல்லி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி தனியாா் கல்லூரி வழியாக ஆசிரியா் நகா் வரை சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தை அடைந்தது.

இந்த பேரணியில் கலந்து கொண்வா்கள் ‘ஜனநாயக திருவிழா‘, ‘என் வாக்கு என் உரிமை‘ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் விஜயகுமாரி உட்பட திரளானோா் கலந்து கொண்டனா்.