அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் செப்டம்பர் 28-ஆம் தேதி காலை பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் இந்தியர்களுடன் செப்டம்பர் 22-ஆம் தேதி மோடி உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு ஹூஸ்டனில் உள்ள இந்திய-அமெரிக்கர்கள் முஸ்லிம் அசோசியேஷன் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா இடையிலான நல்லுறவின் அடிப்படையில் டிரம்ப் கலந்துகொள்வதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பதவியேற்றது முதல், அமெரிக்காவில் இந்திய சமூகத்தினரிடையே மோடி உரையாற்றவிருப்பது இது 3-ஆவது முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


