பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஹூண்டாய் நிறுவனத்துக்கு அமெரிக்கா 47 மில்லியன் டாலர்கள் அபராதம்

தென் கொரியாவை மையமாகக் கொண்ட ஹூண்டாய் நிறுவனத்துக்கு அமெரிக்கா 47 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2019, 8:26 am

DIN

தென் கொரியாவை மையமாகக் கொண்ட ஹூண்டாய் நிறுவனத்துக்கு அமெரிக்கா 47 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. அமெரிக்காவின் சுகாதார விதிகளை மீறும் விதமான அதிக மாசு ஏற்படுத்தக்கூடிய டீசல் இன்ஜின்களை ஏற்றுமதி செய்தது தொடர்பாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2012-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த விதிமீறல் இன்ஜின்களைக் கொண்ட 2,300 வாகனங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் மக்களின் ஆரோக்கியத்துக்கு மாறாக லாபம் ஈட்டும் நோக்கத்தில் ஹூண்டாய் நிறுவனம் செயல்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற மக்களுக்கு எதிரான அநீதிகளை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் நீதித்துறை எச்சரித்துள்ளது.

முன்னதாக, 2015-ஆம் ஆண்டு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க சுகாதாரத்துறை இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தது. அதுபோன்று ஹூண்டாய் நிறுவனத்துக்கு ஏற்கனவே காற்று மாசு விதிமீறல் தொடர்பாக 2 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.