6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காலநிலையை சமாளிப்பதில் ஆக்கப்பூர்வ சக்தியாக விளங்குகிறோம்: ஐ.நா. கூட்டத்தில் சீனா

ஐ.நா.வின் காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு 23-ஆம் நாள் திங்கள்கிழமை நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :25 செப்டம்பர் 2019, 7:33 am

DIN

ஐ.நா.வின் காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு 23-ஆம் நாள் திங்கள்கிழமை நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது. அப்போது, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உரை நிகழ்த்துகையில், 

‘காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. ஒப்பந்தம்’ மற்றும் ‘பாரிஸ் உடன்படிக்கை’ ஆகியவை தொடர்பான கடமைகளை சீனா நிறைவேற்றி வருகிறது. சீனா, சர்வதேச கூட்டங்களில் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான வாக்குறுதியை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளதோடு, இது ஒரு பெரிய நாட்டின் மனவுறுதி மற்றும் பொறுப்புதான் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளது. 

நிலையான வளர்ச்சிக்குத் தேவைவான உள்ளடக்கம், பொது எதிர்காலம் உடைய சமூகத்தை உருவாக்குவதில் ஏற்க வேண்டிய பொறுப்பு ஆகியற்றைக் கருத்தில் கொண்டு, சீனா எப்போதும் காலநிலை மாற்றத்தைச் சமாளித்து வருகிறது. இதுவரை, ஆற்றல் சிக்கனம், புதிய ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாடு ஆகிய துறைகளில் சீனா உலகில் முதலிடம் வகிக்கிறது. 

உயிரினச் சூழல் கட்டுமானம் சீனத் தேசிய வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகளவில் புதிதாக தோன்றியுள்ள பசுமை நிலங்களின் நான்கில் ஒரு பகுதி, சீனாவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'செயல்கள் பழங்கள் ஆகும், ஆனால் சொற்கள் இலைகள் தான்' என்ற பழமொழி மேலை நாடுகளில் உண்டு. 

அதைப்போல, உலக காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் முக்கிய காலக்கட்டத்திலேயே, ஒவ்வொரு நாடும் மனவுறுதியுடன் செயல்பட்டு, ‘பாரிஸ் உடன்படிக்கை’யை நடைமுறைக்கு முன்னெடுத்து, சமாளிப்பு நடவடிக்கைக்கு புதிய உந்து சக்தியை ஊட்ட வேண்டும்.

தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.