
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையம் இயங்கி வந்த இரட்டைக் கோபுரங்கள் அல் குவைதா பயங்கரவாத அமைப்பினால் தகர்க்கப்பட்டதன் 18ம் ஆண்டு நினைவு தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
பயணிகள் விமானத்தைக் கடத்திய பயங்கரவாதிகள், இரட்டைக் கோபுரங்கள் மீது மோதியதில் கட்டடம் முழுமையாக இடிந்து தரைமட்டமானது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.
உலகை உலுக்கிய சம்பவமாக அமைந்த இந்த நிகழ்வு, பயங்கரவாதத்தின் கோர முகத்தை உலகக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.
இந்த இரட்டைக் கோபுர தாக்குதல் நிகழ்வு தொடர்பான சில அறிய வேண்டிய செய்திகள் ஏராளமாக உள்ளன. அவற்றின் சிறிய தொகுப்பு இதோ..
தூங்கிப் போனதால் 9/11 தாக்குதலில் இருந்து தப்பித்த மைக்கேல் ஜாக்சன்: வெளிவந்துள்ள புதிய தகவல்!
இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மாட்டிக்கொள்ளாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவருடைய சகோதரர் ஜெர்மைன் ஜாக்சன் You Are Not Alone: Michael: Through a Brother's Eyes என்றொரு சுயசரிதை நூலில் இதுகுறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
ரூ.33 ஆயிரம் கோடி இழப்பீடு: ஈரான், அல் காய்தாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
அணுகுண்டை வெடிப்போம் என்று மிரட்டிய அல் காய்தா!
அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நிகழ்த்திய இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பதிலடியாக தங்களுடைய இயக்கத் தலைவர் பின் லேடனை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்க முற்பட்டால் ஐரோப்பியக் கண்டம் முழுவதையும் அணுகுண்டு வெடித்து தகர்த்து விடுவோம் என்று அல் கய்தா பயங்கரவாதிகள் எச்சரித்தனர்.
அல்-கொய்தாவின் முக்கிய படைத்தளபதி சுட்டுக்கொலை
இரட்டை கோபுர தாக்குதல் : நஷ்ட ஈடு வழங்க விமான நிறுவனம் முடிவு