விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தென் கொரியாவில் வெள்ளம்: 15 பேர் பலி, 11 பேர் காணவில்லை

தென் கொரியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

News image
15 dead, 11 missing in South Korea floods
Updated On :5 ஆகஸ்ட் 2020, 6:34 am

ANI

தென் கொரியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 11-க்கும் மேற்பட்டோர் காணாமல் சென்றுள்ளதாக மத்திய பேரிடர் மற்றும் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

தென்கொரியாவில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்த நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 1,300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. அதே நேரத்தில் 705 கிடங்குகள் மற்றும் கால்நடை கொட்டகைகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.

5,000 ஹெக்டருக்கும் மேற்பட்ட வேளாண்மை நிலம் நீரில் மூழ்கியுள்ளது. தலைநகர் சோலின் முக்கிய நெடுஞ்சாலைகள், பாலங்கள் ஆகியவற்றின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தென் கொரியா அரசு 45,000-க்கும் மேற்பட்ட மீட்பு  படைகள் மற்றும் தன்னார்வத் தொழிலாளர்களையும் நியமித்துள்ளது. மேலும் நீர் விசையியக்கக் குழாய்கள் போன்ற கிட்டத்தட்ட 5,800 கனரக உபகரணங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.