ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஐரோப்பாவில் முதலீடு செய்யும் டிக்டாக்

ஐரோப்பாவில் முதன்முதலாக 50 கோடி டாலர் மதிப்பில் தரவு மையத்தை அமைக்க உள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஆகஸ்ட் 2020, 12:02 pm

ஐரோப்பாவில் முதன்முதலாக 50 கோடி டாலர் மதிப்பில் தரவு மையத்தை அமைக்க உள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் முக்கிய பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் நிறுவனம் உள்ளது. ஆண்டுகு ஆண்டு அதிகரித்து வரும் புதிய பயனர்கள் காரணமாக பல்வேறு நாடுகளில் நிறுவனத்தின் கிளைகளை நிறுவி வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பாவில் தனது முதல் தரவு மையத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.ன் அயர்லாந்தில் அமைக்கப்பட உள்ள தரவு மையத்திற்காக 50 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

புதிதாக அமைக்கப்பட உள்ள தரவு மையத்தால் புதிதாக வேலைவாய்ப்புகள் பெருகும் எனத் தெரிவித்துள்ள டிக்டாக் நிறுவனம் ஐரோப்பிய மக்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

இந்த தரவுமையம் 2022 முதல் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்தில் டிக்டாக் பங்குகளை விற்க பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.