தென்கொரியாவில் 6 அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவிலிருந்து நவம்பர் 17 முதல் டிசம்பர் 1-ஆம் தேதி வரையிலான தேதியில் தென்கொரியா வந்த ஆறு வீரர்கள் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பியோங்டேக் பகுதியிலுள்ள அமெரிக்க ராணுவ கேரிசன் ஹம்ப்ரிஸ் மற்றும் ஓசன் விமான தளத்திலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் மூலம் தென்கொரியாவிலுள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் மக்கள் என மொத்தம் 391 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் புதிதாக 540 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,703-ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 529-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 193 போ் போட்டி!

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி

மகளிா் மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை பெற அதிமுகவுக்கு வாக்களியுங்கள்

வீட்டில் எரிவாயு உருளை வெடித்து விபத்து: நகை, ஆவணங்கள் தீயில் கருகின!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


