புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட சுற்றுலாத்துறை இழப்புகளை சரிசெய்யும் விதமாக 56 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசு தளர்த்தியுள்ளது.

News image
தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு
Updated On :17 டிசம்பர் 2020, 12:33 pm

DIN

கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட சுற்றுலாத்துறை இழப்புகளை சரிசெய்யும் விதமாக 56 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசு தளர்த்தியுள்ளது.

கரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பலவும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதன்காரணமாக சுற்றுலாத் துறையை நம்பிய பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் தாய்லாந்து நாட்டு அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.

புதிய தளர்வுகளின் மூலம் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசாக்கள் இல்லாமல் தாய்லாந்திற்கு பயணிக்க முடியும். மேலும் 30 நாள்களுக்கு வழங்கப்பட்ட விசா 45 நாள்களாக நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சுற்றுலாப் பயணிகள் 2 வார காலத்திற்கு தனிமைப்படும் நடைமுறை மட்டும் தொடரும் எனவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.