பிரேசிலில் கரோனா பலி 1.86 லட்சத்தைக் கடந்தது!

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1.86 லட்சத்தைக் கடந்துள்ளதாக  அந்நாட்டு சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1.86 லட்சத்தைக் கடந்துள்ளதாக  அந்நாட்டு சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 3 ஆம் இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இரண்டாம் அலை காரணமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் அந்நாட்டு சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50,177 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 706 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கரோனா பாதிப்பு 72 லட்சத்தைக் கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 72,13,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 186,356 ஆக உள்ளது. அதேநேரத்தில் 62,22,764 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 804,035 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com