எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத கரோனா வைரஸ்: 36 பேர் பாதிப்பு

கரோனா வைரஸால் பாதிக்கப்படாத ஒரே கண்டமாக இருந்த அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News image

அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத கரோனா வைரஸ்: 36 பேர் பாதிப்பு(கோப்புப்படம்)

Updated On :22 டிசம்பர் 2020, 4:54 pm IST

கரோனா வைரஸால் பாதிக்கப்படாத ஒரே கண்டமாக இருந்த அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 190க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா தொற்று பாதிப்பில் சிக்கி தவித்து வருகின்றன. எனினும் அண்டார்டிகா கண்டத்தில் மட்டும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது.

அண்டார்டிகா கண்டத்தில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லை என்றாலும், 1,000 ஆராய்ச்சியாளர்களும் பிற பணியாளர்களும் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்டார்டிகாவில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினரிடையே கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. சிலி ஆராய்ச்சி தளத்தில் உள்ள பாதுகாப்புப் படையினரின் உறுப்பினர்கள் 26 பேருக்கும், பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த 10 ஊழியர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அண்டார்டிகா பகுதியில் இருந்து திரும்பிய அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 36 பேருக்கு தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் சிலியில் உள்ள புன்டா அரினாஸ் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அண்டார்டிக்கில் உள்ள அனைத்து முக்கிய ஆராய்ச்சி திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி தடைபட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.