நார்வேயில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக 200க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நார்வே தலைநகரான ஓஸ்லோ பகுதியில் இன்று (டிச.30) அதிகாலை 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
ஓஸ்லோ பகுதியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
உடனடியாக தகவலறிந்து 40க்கும் அதிகமான அவசர ஊர்தி வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றன. இதில் 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
வீடுகளை இழந்த 200-க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.