யேமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
யேமனில் புதிதாக பதவியேற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் தரையிறங்கிய விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், கிட்டத்தட்ட 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 65-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமர் மெய்ன் அப்துல்மாலிக், யேமனுக்கான சவுதி தூதர் முகமது சையத் அல்-ஜாபர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும், காயமடைந்தவர்கள் தெற்கு துறைமுக நகரமான ஏடனில் உள்ள பல்வேறு உள்ளூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினார்.
வெடிகுண்டு விபத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் விமான நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள் என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக அமைந்துள்ள அரசை சீர்குலையச் செய்யவே ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக யேமன் அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

