இஸ்தான்புல்: : துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட போது மோசமான வானிலை காரணமாக விமானம் கீழே விழுந்து, தீப்பிடித்து, மூன்று துண்டுகளாக உடைந்ததில் 3 பேர் பலியாகினர். 179 பேர் காயமடைந்தனர்.
உடைந்து விழுந்த விமானத்தின் ஓட்டைகள் வழியாக, அதில் பயணம் செய்த பயணிகள் வெளியே குதித்து ஓடி வரும் சில புகைப்படங்கள் துருக்கி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.
போயிங் 737 ரக விமானம், இஸ்தான்புல்லில் இருந்து இஸ்மிர் பகுதிக்கு நேற்று புறப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கடும் சூறாவளிக் காற்று மற்றும் மழை காரணமாக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 179 பேர் காயமடைந்தனர் என்று துருக்கி சுகாதாரத் துறை அமைச்சர் ஃபஹ்ரேட்டின் தெரிவித்துள்ளார்.

ஓடுதளத்தில் இருந்து பறந்து சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விமானம் கீழே விழுந்துள்ளது. இதில் விமானம் பல துண்டுகளாக உடைந்துச் சிதறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழியர்களுக்கான சலுகைகளைக் குறைக்கும் டெலோய்ட்! ஐவிஎஃப் சிகிச்சைக்கான நிதியையும்

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


