சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் 9 பேர் மரணம்
சீனாவில் அதிகம் கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இதுவரை 9 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


சீனாவில் அதிகம் கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இதுவரை 9 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக புதன்கிழமை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை சுமார் 440 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறை ஆணைய துணைத் தலைவர் லீ பின் தெரிவித்தார்.
மேலும் இந்த வைரஸ் கிருமி பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் நோய் தொற்று அபாயம் கொண்டது என்று சீன சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்தவர்களில் தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் 282 பேருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 278 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். இதன் பாதிப்பு காரணமாக 6 பேர் மரணமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்புக்கான மருத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...