மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கரோனா வைரஸ்: சீனாவிலுள்ள இந்தியத் தூதரகம் உதவி எண்கள் அறிவிப்பு

கரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள விரும்புவோருக்கான உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2020, 7:17 am

DIN

கரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள விரும்புவோருக்கான உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 15-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். மேலும், உலகம் முழுவதும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 571 ஆக உயா்ந்துள்ளது.

இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘‘புதிய ‘கரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது’’

இதையடுத்து, சீனாவிலிருந்து இந்தியா வருபவா்களுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், சீனாவில் கரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக ஹுபெய் மாகாணம், வூஹான் நகரிலுள்ள இந்தியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களிடமிருந்தும் இந்தியத் தூதரகம் விவரங்களைப் பெற்று வருகிறது. பெய்ஜிங் மற்றும் வூஹானில் உள்ள சீன அதிகாரிகளுடனும், ஹுபெய் மாகாணத்தில் உள்ள இந்தியர்களுடனும் தூதரகம் தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு வழங்கிய ஆலோசனைகள் உட்பட சீனாவில் ஏற்பட்டுள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட சீன அதிகாரிகள் வூஹானில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கல் உட்பட அனைத்து உதவிகளையும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று இந்திய தூதரகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூதரகத்துடன் தொடர்பு கொள்ள விரும்புவோருக்கு +8618612083629 மற்றும் +8618612083617 ஆகிய இரண்டு உதவி எண்களை சீனாவிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.