யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தான்சானியா நாட்டின் முன்னாள் அதிபர் மறைவு

தான்சானியா நாட்டின் முன்னாள் அதிபர் பெஞ்சமின் எம். காபா (81) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

News image
உயிரிழந்த தான்சானியா முன்னாள் ஜனாதிபதி பெஞ்சமின் எம்.காபா
Updated On :24 ஜூலை 2020, 7:48 am

DIN

தான்சானியா நாட்டின் முன்னாள் அதிபர் பெஞ்சமின் எம்.காபா (81) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1995 முதல் 2005 வரை தான்சானியா நாட்டின் அதிபராக பதவி வகித்தவர் பெஞ்சமின் எம்.காபா.

கிழக்கு ஆப்பிரிக்காவில் பல பிராந்திய சமாதான முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய எம்.காபா, உடல்நலக்குறைவால் டார் எஸ் சலாமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

"தேசத்தின் மீதான அவரது மிகுந்த அன்பு, அவரது பக்தி, கடின உழைப்பு மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் நான் அவரை நினைவில் கொள்வேன்" என்று தான்சானியா அதிபர் மாக்ஃபுலி கூறினார்.

எம்.காபாவின் மறைவிற்கு நாட்டில் ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், அனைத்து கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அரசு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.