சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 2020ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 8 ஆம் நாள், நிங்சியா குய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் களஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
அதே நாள் பிற்பகல், வூசோங் நகரத்தைச் சேர்ந்த ஹோங்சிபோவ் வட்டத்தின் ஹோங்தே கிராமம், மஞ்சள் ஆற்றின் வூசோங் நகரப் பகுதி, ச்சின்சிங் வட்டத்தின் சின்குவா யுவான் குடியிருப்புப் பிரதேசம் ஆகியவற்றையும் ஷிச்சின்பிங் பார்வையிட்டார். இப்பயணத்தின் வழி, உள்ளூர் பிரதேசத்தின் வறுமை ஒழிப்புப் பணி, மஞ்சள் ஆற்றின் உயிரினச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தேசிய ஒற்றுமைப் பணி முதலியவை குறித்து அவர் கேட்டறிந்தார். ஒவ்வொரு பிரதேசத்தில் கள ஆய்வு மேற்கொள்ளும் போதும் அவர் மக்கள் மீதான அன்பினை வெளிப்படுத்தினார்.
1997ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான 24 ஆண்டு காலத்தில், ஷிச்சின்பிங் 4 முறை நிங்சியா குய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் களஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் எப்போதுமே அங்குள்ள மக்களின் மீது அக்கறை கொண்டுள்ளார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்