அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும்: சீனா

2020 உய்கூர் இன மக்களின் மனித உரிமைக் கொள்கை தொடர்பான மசோதாவை அமெரிக்கா சட்டமாக்குவது

News image
Updated On :18 ஜூன் 2020, 1:08 pm

DIN

2020 உய்கூர் இன மக்களின் மனித உரிமைக் கொள்கை தொடர்பான மசோதாவை அமெரிக்கா சட்டமாக்குவது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகம் 18ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கடுஞ்சினத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.

சின்ஜியாங் தொடர்பான பிரச்சினைக்கும், மனித உரிமை, தேசிய இனம் மற்றும் மதத்துக்குமிடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை. அது பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிரிவினைவாதத்துடன் தொடர்புடையது. கடந்த 3 ஆண்டுகளில் சின்ஜியாங்கில் வன்முறை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. உள்ளூர் மக்கள் அமைதியாகவும் இன்பமாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையைப் பொருட்படுத்தாமல் பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை வரையறையை மேற்கொண்டு வரும் அமெரிக்கா, இம்மசோதா மூலம் சீனாவின் இறையாண்மை, தேசிய இன உறவு, சின்ஜியாங்கின் செழுமை மற்றும் அமைதி ஆகியவற்றை சீர்க்குலைத்து சீனாவின் வளர்ச்சியைத் தடுக்கும் அதன் தீய நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா உடனடியாக தனது தவறைத் திருத்தி சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடில், சீனா உறுதியாக பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.