சிங்கப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து, சிங்கப்பூா் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, புதிதாக 262 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அவா்களில், பெரும்பாலனோர் தொழிலாளா்களுக்கான ஓய்வறைகளில் தங்கியிருந்த வெளிநாட்டுத் தொழிலாளா்கள். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,095-ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இதுவரை 26 போ் பலியாகியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.