உலகம்
சின்ஜியாங் விவகாரத்தின் மூலம் சீன வளர்ச்சியைத் தடுக்க முயலும் அமெரிக்கா
2020ஆம் ஆண்டு உய்கூர் மனித உரிமைக் கொள்கைகள் பற்றிய மசோதாவை சட்டமாக்க, அமெரிக்கா சமீபத்தில் முயன்றுள்ளது.
2020ஆம் ஆண்டு உய்கூர் மனித உரிமைக் கொள்கைகள் பற்றிய மசோதாவை சட்டமாக்க, அமெரிக்கா சமீபத்தில் முயன்றுள்ளது.
அமெரிக்காவின் இச்செயல் குறித்து பன்னாட்டு பிரமுகர்கள் கருத்து தெரிவித்தபோது,
சின்ஜியாங் விவகாரம் முற்றிலும் சீனாவின் உள்விவகாரங்களில் ஒன்றாகும். இந்த விவகாரத்தின் மூலம் சீனாவின் நிலைப்புத்தன்மையைச் சீர்குலைத்து, சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பது அமெரிக்காவின் உள்நோக்கமாகும் என்று கூறினர்.
மற்ற நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதற்கான வலுவான ஆதாரமாக இம்மசோதா விளங்குகிறது. உள்நாட்டில் தொடர்ச்சியாக காணப்பட்ட வரும் இனவெறி மோதல் சம்பவங்களைப் பொருட்படுத்தாமல், சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டுவது கேலிக்கூத்தாகும் என்று ரஷிய நாடாளுமன்றத்தின் கீழ் அவையின் சர்வதேச விவகாரக் குழுவின் உறுப்பினர் ஏலேனா சுட்டிக்காட்டினார்.