மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சீன - ரஷிய இந்திய வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் 23ஆம் நாள், காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

News image
Updated On :24 ஜூன் 2020, 7:20 am

DIN

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் 23ஆம் நாள், காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மூன்று நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு குறித்து வாங் யீ 3 முன்மொழிவுகளை முன்வைத்தார்.

ஒன்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஒத்துழைப்பு நிலைமையை உயர்த்தி, பிரிக்ஸ் நாடுகளின் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் பேணிக்காக்க வேண்டும். 

இரண்டு, புதிய ரக கரோனா வைரஸ் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து, தொடர்புடைய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும். 

மூன்று, பொருளாதார மற்றும் வர்த்தகம், எரியாற்றல், போக்குவரத்து, கல்வி, பண்பாடு, சுகாதாரம் முதலிய துறைகளில் முத்தரப்பு அமைச்சர்களின் உரையாடல் அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

மேலும், மூன்று நாடுகளுக்கிடையிலான பரஸ்பரக் கூட்டாளி மற்றும் வாய்ப்புத் தன்மை வாய்ந்த உறவை சீனா, ரஷியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் சரியாகக் கையாள வேண்டும் என்றும் வாங் யீ தெரிவித்தார். 

அதனையடுத்துப் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவும் மூன்று நாடுகளும் பலதரப்புவாதத்தையும் உலகின் பலதுருவமயமாக்கத்தையும் உறுதியாக ஆதரிக்க வேண்டும் என்றும், சர்வதேச உறவு என்பது சர்வதேசச் சட்டக் கோட்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்தனர். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.