மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

விண்வெளியில் பேட்டரி மாற்றும் பணியின்போது, கண்ணாடியை தவறவிட்ட நாசா வீரர்!

விண்வெளிக்குச் சென்ற நாசா விண்வெளி வீரர் ஒருவர் அங்கு தனது கண்ணாடியை தவற விட்டுள்ளார். இருப்பினும் இதனால் விண்வெளி மையத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என நாசா கூறியுள்ளது. 

News image
விண்வெளியில் வீரர்கள்
Updated On :29 ஜூன் 2020, 10:37 am

DIN

விண்வெளிக்குச் சென்ற நாசா விண்வெளி வீரர் ஒருவர் அங்கு தனது கண்ணாடியை தவற விட்டுள்ளார். இருப்பினும் இதனால் விண்வெளி மையத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என நாசா கூறியுள்ளது. 

சர்வதேச விண்வெளி மையத்தில் பேட்டரிகளை மாற்றுவதற்காக அமெரிக்காவின் விண்வெளி கமாண்டர் கிறிஸ் கேசிடி மற்றும் பாப் பென்கென் ஆகியோர் விண்வெளிக்குச் சென்றனர். 

விண்வெளி மையத்தில் இருந்து வெளியே செல்லும்போது, தங்களது விண்வெளி உடையுடன் இணைக்கப்பட்ட நிலையில் மணிக்கட்டு பகுதியில் ஒரு கண்ணாடியை வைத்திருப்பர். பேட்டரி மாற்றும் பணியில் ஈடுபட்டபோது, கமாண்டர் கிறிஸ் கேசிடி தனது கண்ணாடியை தவறவிட்டுள்ளார். அது விண்வெளியில் மிதந்து சென்றது. பூமியைச் சுற்றி வரும் மில்லியன் கணக்கான குப்பைகளுடன் அது சேர்ந்ததாக நாசா கூறுகிறது. 

கண்ணாடியை தவறவிட்ட நிலையிலும், 6 மணி நேரம் பணியை முடித்துவிட்டு வீரர்கள் திரும்பியுள்ளனர். மேலும், இதனால் விண்வெளி மையத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி மையத்தில் காலாவதியான நிக்கல்-ஹைட்ரஜன் பேட்டரிகளுக்கு பதிலாக அதிநவீன மூன்று புதிய லித்தியம்- அயன் பேட்டரிகளை வீரர்கள் பொறுத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.