எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சீனாவில் வைரஸ் பரவல் தடுப்புக்கு உதவும் அறிவியல் தொழில்நுட்பம்

புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, இவ்வைரஸுக்கு எதிரான பல அறிவியல் ஆய்வுகள் சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

News image
Updated On :8 மார்ச் 2020, 8:45 am

DIN

புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, இவ்வைரஸுக்கு எதிரான பல அறிவியல் ஆய்வுகள் சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு பாடங்களையும் துறைகளையும் கடந்த சீன அறிவியல் ஆராய்ச்சிக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட்டு வருகின்றன.

மருத்துவச் சிகிச்சை மற்றும் மருந்து, தடுப்பூசி ஆய்வு மற்றும் தயாரிப்பு, பரிசோதனை நுட்பம் மற்றும் பொருட்கள், நோய் காரணவியல் மற்றும் கொள்ளை நோயியல், விலங்கு மாதிரிக் கட்டமைப்பு ஆகிய 5 துறைகளில் சுமார் ஒரு திங்கள் காலத்தில் ஆக்கப்பூர்வ முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு அறிவியல் தொழில் நுட்பம் வலுவான ஆதாரத்தை வழங்கியுள்ளது. சில தடுப்பூசிகள் வரும் ஏப்ரல் திங்களில் மருத்துவ ஆய்வு மற்றும் அவசரப் பயன்பாட்டுக்கு வர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அறிவியலாளர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர்நிலை கணக்கீட்டின் மூலம் வைரஸ் பரவிய ஒரு திங்களுக்குள் வைரஸின் டிஎன்ஏ வரிசையை உறுதிப்படுத்தி உரிய நேரத்தில் உலகிற்கு வெளியிட்டது. இந்த ஆய்வு சாதனையின் பகிர்வு, புதிய மருந்து மற்றும் தடுப்பூசியின் ஆராய்ச்சியைத் தூண்டியுள்ளது.

Story image

ஹோ ஷென் ஷான் மற்றும் செய் ஷென் ஷான் மருத்துவமனைகளின் கட்டுமானத்தில் சீனாவின் பெய்தொவ் செயற்கைக் கோள் புவியிடங்காட்டி முறைமை, அளவீட்டுப் பணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

வசந்த விழா விடுமுறையில், சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் முன்னேறிய குடிமக்கள் அடையாள முறைமையைப் பயன்படுத்தி, வைரஸ் பாதிப்பு முதலில் தோன்றிய இடங்களில் இருந்த மக்கள் சென்ற இடங்களைக் கண்டறிந்து, பயனுள்ள முறையில் வைரஸின் பரவலைத் தடுத்துள்ளன.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பின் பெய்ஜிங்கில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிப் பணியைப் பார்வையிட்ட போது கூறியதைப் போல், அமைப்பு முறை சார் மேம்பாட்டை முற்றிலும் வெளிக்கொணர்ந்து, வலிமைமிக்க அறிவியல் தொழில் நுட்பங்களைச் சீராகப் பயன்படுத்தினால், வைரஸ் பாதிப்புக்கு எதிராக முன்கண்டிராத சோதனையில் வெற்றி பெறுவது உறுதி.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.