இரண்டு வாரங்களுக்கு சர்வதேச விமான சேவையை நிறுத்தியது சவூதி அரேபியா

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு சர்வதேச விமானச் சேவையை முற்றிலும் நிறுத்தியது சவூதி அரேபியா.
இரண்டு வாரங்களுக்கு சர்வதேச விமான சேவையை நிறுத்தியது சவூதி அரேபியா
Updated on
1 min read

ரியாத்: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு சர்வதேச விமானச் சேவையை முற்றிலும் நிறுத்தியது சவூதி அரேபியா.

இந்த இரண்டு வார காலம் என்பது அதிகாரப்பூர்வ விடுமுறையாகக் கருதப்படும் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சொந்த நாடு திரும்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

விதிவிலக்காக சில விமான சேவையை மட்டும் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று சவூதி அரேபியாவின் உள்விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com