சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரின் ஹுபெய் மாநிலப் பிரதிநிதிக் குழுவின் விவாதக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது ஷி ஜின்பிங் பேசுகையில்,
கொவைட்-19 தொற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹுபெய் மாநிலத்திற்கு ஆதரவுகளை தொடர்ச்சியாக அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், தேசிய மற்றும் பிரதேச வளர்ச்சியில் முக்கிய தகுநிலை ஹுபெய் மாநிலத்திற்கு மாறவில்லை. சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவி அளித்து, பல்வகை கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்