சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

துருக்கியில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை தெரிவித்துள்ளது. 

News image
Turkey's earthquake toll rises to 76
Updated On :2 நவம்பர் 2020, 6:18 am

ANI

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை தெரிவித்துள்ளது. 

துருக்கி நாட்டின் மேற்கு இஸ்மிர் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6ஆக பதிவான நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்து போயுள்ளது. ஆங்காங்கே கட்டடங்கள் இடிந்து முற்றிலும் தரைமட்டமாகியுள்ளன. 

இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கட்டட இடுபாடுகளில் சிக்கி இதுவரை 43 போ் உயிரிழந்தனா். 

இந்த நிலநடுக்கத்தால் 962 பேர் காயமடைந்துள்ளனர். 743 பேர் சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளனர் மற்றும் 219 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், இஸ்மீர் நகரில் தற்காலிகமாக கூடாரங்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு, போர்வை உள்பட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றது. 

இடிபாடுகளில் சிக்கிய 105 பேரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.