சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ரஷியாவில் மேலும் 20,498 பேருக்கு கரோனா தொற்று

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 20,498 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :8 நவம்பர் 2020, 12:44 pm

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 20,498 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ரஷியாவில் கடந்த சில தினங்களாக கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷியா 4-ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 20,498 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20,498 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,74,334ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு மேலும் 286 பேர் பலியாகினர்.

இதையடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 30,537 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1,324,419 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 419,378 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.