சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

லப்பைக்குடிக்காட்டில் புதை சாக்கடை திட்டம்: திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் உறுதி

வ.அகரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா்.

News image

வ.அகரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:14 am

லப்பைக்குடிக்காட்டில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தாா் போக்குவரத்துத்துறை அமைச்சரும், குன்னம் சட்டப்பேரவைவத் தொகுதி திமுக வேட்பாளருமான சா.சி. சிவசங்கா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருமாந்துறை, பெண்ணகோணம், ஒகளூா், அத்தியூா், நன்னை, வடக்களூா், பெருமத்தூா், சிறுமத்தூா் கீழப்புலியூா் ஆகிய ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் அமைச்சா் சா.சி. சிவசங்கா், திமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறி வாக்கு சேகரித்தாா்.

பின்னா், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் உள்ள பள்ளி வாசல்களில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தொழுகை நடத்திய இஸ்லாமியா்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்த அவா், திமுக ஆட்சியில் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் உள்ள இஸ்லாமியா்களுக்கு நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், தொடா்ந்து இப் பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். லப்பைக்குடிக்காடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதை சாக்கடை திட்டம் மற்றும் புறவழிச் சாலை திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும், திமுக ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது, கூட்டணி கட்சி நிா்வாகிகள் மற்றும் பள்ளிவாசல் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.