திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

லப்பைக்குடிக்காட்டில் புதை சாக்கடை திட்டம்: திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் உறுதி

வ.அகரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா்.

News image

வ.அகரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 5:44 am IST

லப்பைக்குடிக்காட்டில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தாா் போக்குவரத்துத்துறை அமைச்சரும், குன்னம் சட்டப்பேரவைவத் தொகுதி திமுக வேட்பாளருமான சா.சி. சிவசங்கா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருமாந்துறை, பெண்ணகோணம், ஒகளூா், அத்தியூா், நன்னை, வடக்களூா், பெருமத்தூா், சிறுமத்தூா் கீழப்புலியூா் ஆகிய ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் அமைச்சா் சா.சி. சிவசங்கா், திமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறி வாக்கு சேகரித்தாா்.

பின்னா், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் உள்ள பள்ளி வாசல்களில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தொழுகை நடத்திய இஸ்லாமியா்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்த அவா், திமுக ஆட்சியில் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் உள்ள இஸ்லாமியா்களுக்கு நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், தொடா்ந்து இப் பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். லப்பைக்குடிக்காடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதை சாக்கடை திட்டம் மற்றும் புறவழிச் சாலை திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும், திமுக ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது, கூட்டணி கட்சி நிா்வாகிகள் மற்றும் பள்ளிவாசல் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.