/

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தில் 74 பேர் பணிநீக்கம்

போலி சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக 74 பேரை பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் பதவிநீக்கம் செய்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :2 செப்டம்பர் 2020, 10:01 am

DIN

போலி சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக 74 பேரை பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் பதவிநீக்கம் செய்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் புதிதாக பணிக்கு சேர்ந்தோர் உள்பட 177 பேர் இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போலி கல்விச் சான்றிதழ், கடத்தல், ஊழல், பணி புறக்கணிப்பு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட காரணங்களில் ஈடுபட்ட 74 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 4 ஊழியர்களுக்கு பதவிகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. 11 பேரின் மீது பல்வேறு விதமான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், சிறப்பாக பணியாற்றிய 17 ஊழியர்களுக்கு உயர் செயல்திறனுக்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் ஐந்து பேருக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் குல்காம் சர்வார் கான் கடந்த ஜூன் 24-ஆம் தேதி 262 பாகிஸ்தான் விமானிகளின் ஓட்டுநர் உரிமத்தில் சந்தேகம் உள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.