ரஷியாவில் புதிதாக 5,529 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியா கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக ,529 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதித்தோர் எண்ணிக்கை 10,73,849 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 18,785 ஆக உயர்ந்துள்ளது.
ரஷியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாஸ்கோவில் மட்டும் 24 மணி நேரத்தில் 730 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோவில் மட்டும் இதுவரை 2,72,523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷியாவில் நேற்று மட்டும் 5,605 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 8,84,305 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் இதுவரை 2,94,71,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,33,340 பேர் பலியான நிலையில், 2,12,96,998 குணமடைந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக ரஷியா 4-வது இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


