சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நீரில் உருவான நஞ்சு: திடீரென பலியான 330 யானைகளால் அதிர்ச்சி

தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் பலியான சம்பவம் வன ஆர்வலர்களை அச்சமடைய செய்துள்ளது.

News image
நீரில் உருவான நஞ்சு: திடீரென பலியான 330 யானைகளால் அதிர்ச்சி
Updated On :22 செப்டம்பர் 2020, 7:36 am

DIN

தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் பலியான சம்பவம் வன ஆர்வலர்களை அச்சமடைய செய்துள்ளது.

நீரில் உள்ள சயனோபாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் நஞ்சுகள் 300 க்கும் மேற்பட்ட யானைகளை கொன்றன என்று அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர், இது மரணங்கள் தொடர்பான விசாரணையின் முடிவை அறிவித்தது.

நீரில் மற்றும் சில நேரங்களில் மண்ணில் காணப்படும் நுண்ணிய உயிரினங்கள் சயனோ பாக்டீரியாக்கள் எனப்படுகின்றன. பொதுவாக இந்த சயனோபாக்டீரியாக்கள் அனைத்தும் நஞ்சுகளை உற்பத்தி செய்வதில்லை.ஆனால் காலநிலை மாற்றம் உலகளாவிய வெப்பநிலையை அதிகரித்து வருவதால் நஞ்சுகள் உருவாவது அடிக்கடி நிகழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போட்ஸ்வானா வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துணை இயக்குநர் சிரில் தாவோலோ, நச்சு உண்டான நீரைப் பருகியதால் 330 யானைகள் பலியாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“மே மாத தொடக்கத்தில் முதன்முதலில் பதிவாகத் தொடங்கிய யானைகளின் இறப்புகள் ஜூலை மாதம் 330 ஆக உயர்ந்துள்ளது. எனினும் போட்ஸ்வானாவின் வனவிலங்குகள் இன்னும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் யானைகள் மட்டும் ஏன் பாதிக்கப்பட்டன என்பது குறித்தும் பிற விலங்குகள் எவ்வாறு தப்பிப் பிழைத்தன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.