மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தடுப்பூசி கண்டுபிடிக்கும் முன் கரோனா பலி 20 லட்சத்தை எட்டலாம்: உலக சுகாதார அமைப்பு

சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முன்பு உலகளவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

News image

தடுப்பூசி கண்டுபிடிக்கும் முன் கரோனா பலி இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு

Updated On :26 செப்டம்பர் 2020, 7:42 am


ஜெனீவா: சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முன்பு உலகளவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அவசரகால அமைப்புத் தலைவர்  மைக் ரயன் கூறுகையில், உலகளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லாமல் கரோனா பாதித்து பலியாவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

சீனாவில் முதல் முறையாக கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்களில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில், மைக் ரயன் பேசுகையில், பொது முடக்கத்தை தளர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளீர்களா என்று சுய பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஐரோக்கிய நாடுகளையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கரோனா பரிசோதனை, கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிவது மற்றும் கைகளை சுத்தப்படுத்துவது போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.