சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இஸ்ரேலில் ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் வரை பலியாகி வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிதியம் வெளியிட்ட அறிக்கையில் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களால் நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சுற்றுச்சூழல் மாசுபாடுகள் தொற்று நோய் பரவலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கரோனா தொற்று பாதிப்பிலும் காற்று மாசுபாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.” என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகள் குறித்து இந்த அறிக்கை சுட்டிக்காட்டியதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளின் விளைவாக சுகாதார சிக்கல்களைக் குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.
"கரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து, இஸ்ரேல் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.காற்று, நீர் போன்றவற்றில் ஏற்படும் மாசுபாடுகளைக் குறைத்து மக்கள் பயன்படுத்தத்தக்க பசுமை நிறைந்த சூழலை உருவாக்க வேண்டும்” எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் வரை இஸ்ரேலில் இறப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காா் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த பிரிட்டன்!

துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவா் கைது

தனியாா் டிராக்டா் தயாரிப்பு நிறுவனம் முன் சுமை தூக்கும் தொழிலாளி தீக்குளிப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



