பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தென்கொரியாவில் பிரிட்டன் விமானங்களுக்கான தடை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

புதிய வகை கரோனா பரவல் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கானத் தடையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

தென்கொரியாவில் பிரிட்டன் விமானங்களுக்கான தடை மேலும் 2 வாரம் நீட்டிப்பு

Updated On :6 ஜனவரி 2021, 6:27 pm IST

புதிய வகை கரோனா பரவல் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கானத் தடையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட கரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் அந்நாட்டுடனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில் தென்கொரிய நாட்டில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள அந்நாட்டு அரசு பிரிட்டன் விமானங்களுக்கு விதித்திருந்த தடையை ஜனவரி 21 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

இதற்கான அறிவிப்பை தென்கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 28 வரை விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் இதுவரை புதிய வகை கரோனா தொற்றுக்கு 11 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.